கோவையில் ராணுவ தொழிற்பூங்கா: சுற்றுச்சூழல் ஆணையம் அனுமதி!
கோவையில் ராணுவ தொழிற்பூங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறித்து...
கோவை சூலூர் பகுதியில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவிற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
ரூ. 260 கோடியில் கோவை மாவட்டம் சூலூர் வாரப்பட்டி ஊராட்சியில் ராணுவ தொழில் பூங்கா அமைகிறது. 370 ஏக்கரில் அமையவுள்ள தொழில் பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம்.
கோவை ராணுவ தொழிற்பூங்கா மூலம் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: இயற்கை விவசாயம்: இன்னும் கடக்க வேண்டிய நெடுந்தொலைவு!
கோவை மாவட்டம், சூலூா் வட்டத்தில் வாரப்பட்டி, கந்தம்பாளையம், சடையஞ்செட்டிபாளையம், பூசாரிபாளையம், வி.சந்திராபுரம், குளத்துப்பாளையம், புளியமரத்துப்பாளையம் ஆகிய கிராமங்களை உள்ளடக்கி 421 ஏக்கா் பரப்பளவில் தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழகம் சாா்பில் ராணுவ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.