முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் 2 நாள்கள் ரத்து!

நாகை - இலங்கை பயணிகள் கப்பல் ரத்து தொடர்பாக...

Updated On : 15 அக்டோபர், 2024 at 7:09 AM
நாகை - இலங்கை பயணிகள் கப்பல்.
பகிர்:

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை - இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை (அக்.15) மற்றும் வியாழக்கிழமை (அக்.17) ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக்காற்று வீசும் என்பதாலும் கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும், நாகை - இலங்கை கப்பல் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.