சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொள்ளும் போலீஸார். 
தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை?

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மீனவ இளைஞர், சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது தொடர்பாக, அவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் (20). மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் இவர், புதன்கிழமை காலையில் தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளப்பகுதியில் இறந்த நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், தலை, கால் பகுதிகளில் லேசான காயங்கள் இருப்பதாகவும், இவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்தனர்.

மேலும், இது குறித்து தடையவியல் பிரிவு போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சக்திவேல் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்

”நெல்லைக்கென 3 Special அறிவிப்புகள்! சொல்லவா?” முதல்வர் மு.க. ஸ்டாலின்

நீக்கப்பட்ட வாக்காளர்கள் பெயரைச் சேர்க்க... 12 ஆவணங்கள் எவை?

SCROLL FOR NEXT