முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தற்போதைய செய்திகள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை?

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

Updated On : 16 அக்டோபர், 2024 at 8:22 AM
கோப்புப்படம்
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு எங்கெல்லாம் மழை பெய்யும் என்ற சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்கு (மாலை 4 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், திருச்சி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →