விபத்துக்குள்ளான கார் 
தற்போதைய செய்திகள்

அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி

அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

DIN

அவிநாசி: அவிநாசி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

கோவை மருதமலை சாலை ஐஓபி காலனியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மகள்கள் அபர்ணா (26). சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஐஐஎம்-இல் 2-ம் ஆண்டு எம்.பி.ஏ., படித்து வருகிறார். அவரது இளைய மகள் ஹேமா (21). கோவை தனியார் கல்லூரியில் பி.இ., படித்து வருகிறார். மேலும் கோவை ஆர்.எஸ்.புரம் ஐஸ்வர்யா காம்பவுண்டை சேர்ந்த மோனிஷ் பாபு (28). இவர்கள் 3 பேரும் காரில் கர்நாடக மாநிலம் பெங்களூரூவில் இருந்து கோவை நோக்கி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வந்து கொண்டிருந்தனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பழங்கரை அருகே வந்துகொண்டிருந்தபோது, அங்கு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோதியதில் பலத்த காயமடைந்த அபர்ணா, ஹேமா, காரை ஒட்டி வந்த மோனிஷ் பாபு ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவலறிந்து அவிநாசி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விபத்தில் பலியானவர்களின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து லாரி ஓட்டுநர் கோவை கரும்புக்கடையை ரகுமான்கான் (24) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் பேரணி

பொருளாதார மேம்பாட்டுக்கு கடல்வழி வணிக ஊக்குவிப்பு அவசியம்: அமைச்சா் எ.வ.வேலு

என்.சி.சி. மாணவருக்கு பாராட்டு விழா

மானாமதுரை தெருக்களின் ஜாதி பெயா் அகற்ற முடிவு

சென்னை துறைமுகத்தில் ஹிந்தி தின கொண்டாட்டம்

SCROLL FOR NEXT