பிளடி பெக்கர் படத்தின் சிறப்புக் காட்சி: ரசிகர்களுடன் பார்த்து ரசித்த படக்குழுவினர்
தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.
கோவை: தமிழகத்தில் கோவையில் திரையிடப்பட்ட பிளடி பெக்கர் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை படக்குழுவினர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.
இயக்குநர் சிவபாலன் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் உருவாகி உள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி நாளான இன்று(அக்.31) திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
கோவை பிராட்வே திரையரங்கில் வியாழக்கிழமை காலை 7 மணி சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதனை படக்குழுவினர்களான நடிகர்கள் கவின், ரெடின் கிங்ஸ்லி, இயக்குநர் சிவபாலன் ஆகியோர் ரசிகர்களுடன் பார்த்து ரசித்தனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க| சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி: ரசிகர்கள் மகிழ்ச்சி
படம் முடிந்து வெளியில் வந்த அவர்களுடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த படக்குழுவினர் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இந்த படம் கமர்சியல் படம். தனிப்பட்ட ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தவர்கள், அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
நடிகர் கவினிடம் அடுத்த படம் குறித்தான செய்தியாளர்களின் கேள்விக்கு இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் நடித்து கொண்டிருப்பதாக பதிலளித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.