முகப்பு
செய்திகள்

எதிர்நீச்சல் பார்வதி நடித்த இணையத் தொடர் நிறைவு! விடியோ வெளியிட்டு உருக்கம்!

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை பார்வதி, போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

Updated On : 9 மார்ச் 2026, 4:53 pm IST
நடிகை பார்வதி - படம் - இன்ஸ்டாகிராம்
பகிர்:

எதிர்நீச்சல் தொடரில் நடித்துவரும் நடிகை பார்வதி, போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் விடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் போலீஸ் இணையத்தொடர் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடந்தவற்றைக் குறிப்பிடும் வகையில், நினைவுகளை ரசிகர்களுடன் பகிர்ந்து நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 2025 செப்டம்பர் முதல் போலீஸ் போலீஸ் இணையத் தொடர் ஒளிபரப்பாகி வந்தது.

Advertisement

Advertisement

மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்த இந்த இணையத் தொடரில், சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், எதிர்நீச்சல் பார்வதி, ஜனனி அசோக் குமார், சத்யா, தீபக், வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்தனர்.

காமெடி, டிராமாவாக ஒளிபரப்பான இந்த இணையத் தொடர் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த இணையத் தொடர் சமீபத்தில் நிறைவடைந்தது.

இதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், விடியோக்களை நடிகை பார்வதி ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

போலீஸ் போலீஸ் இணையத் தொடரில் நடித்த அனைவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தொகுத்து பார்வதி பதிவிட்டுள்ளதாவது:

''போலீஸ் போலீஸ் இணையத் தொடருக்கு நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி. மிகச்சிறந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அடங்கிய குழுவுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம்'' எனக் குறிப்பிட்டு உடன் நடித்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர் குழு, ஒளிப்பதிவாளர்கள், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Ethiraneechal Actress Parvathy, shared photos and videos from the web series Police Police with her fans

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments