ரித்திகாவுக்கு பெண் குழந்தை. படம்: இன்ஸ்டாகிராம்
தற்போதைய செய்திகள்

பாக்கியலட்சுமி தொடர் நடிகைக்கு பெண் குழந்தை!

பாக்கியலட்சுமி தொடர் நடிகை ரித்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

DIN

பாக்கியலட்சுமி தொடர் நடிகை ரித்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா. இவர் பாக்கியலட்சுமி, சாக்லெட் உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.

தொகுப்பாளினியாக சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ரித்திகா, சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானார். இதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று, தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கினார்.

தொடர்ந்து, வினு என்பவரைத் திருமணம் செய்துகொண்ட ரித்திகா, திருமணத்துக்குப் பிறகு இவர் நடித்துக்கொண்டிருந்த பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகினார்.

இன்ஸ்டாகிராமில் அவ்வபோது புகைப்படங்களை வெளியிடும் இவர், முன்னதாக தான் கருவுற்று இருப்பதாக அறிவித்து இருந்தார். பின்னர், அது தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

நடிகை ரித்திகாவுக்கு சில நாள்கள் முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான சின்னத்திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தி இருந்தனர்.

இந்த நிலையில், ரித்திகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், தனக்கு மகள் பிறந்து இருப்பதாகத் தெரிவித்துள்ளார். அவருடைய பதிவிற்கு ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீதான வரிக் குறைப்பு: டிரம்ப்புக்கு பிரதமர் மோடி நன்றி!

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT