இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் பிரதமரின் வருகை! சர்வதேச நீதிமன்றத்திலிருந்து வெளியேறும் ஹங்கேரி!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறுவதைப் பற்றி...

DIN

ஹங்கேரி நாட்டுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சென்றுள்ள நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அந்நாடு வெளியேறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் போரில் ஏராளமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இருப்பினும், பிரதமர் நெதன்யாகு ஹங்கேரியின் தீவிர வலதுசாரி பிரதமரான விக்டோர் ஆர்பனின் அழைப்பை ஏற்று அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து ஹங்கேரி நாடு வெளியேறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிரதமர் ஆர்பனின் தலைமைச் செயலாளரான ஜெர்ஜெலி குல்யாஸ் கூறுகையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அரசியலமைப்பிற்கும் சர்வதேச சட்டமுறைகளுக்கும் உள்பட்டு ஹங்கேரி அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக,உலக அளவிலான போர்க் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடிவாரணட்டின் அடிப்படையில் அந்நபர் அதன் உறுப்பு நாடுகளில் கால் வைத்தால் அவரை கைது செய்து நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆனால், பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டபோது அவரது நெருங்கிய கூட்டாளியான ஹங்கேரி பிரதமர் ஆர்பன் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பயிற்சியில் பலியான 4 அமெரிக்க வீரர்களுக்கு லிதுவேனியா அரசு மரியாதை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுச்சேரி மக்களுக்கு தீபாவளிப் பரிசு! விடுமுறை அறிவிப்பு!

குன்னூரில் மண்சரிவு: நல்வாய்ப்பாக அசம்பாவிதம் தவிர்ப்பு!

தீபாவளி! 4,067 பேருந்துகள் இயக்கம் - இருநாள்களில் 3.5 லட்சம் பேர் பயணம்!

இந்தியாவுடன் ஆப்கன் சதித் திட்டம்! பாக். அமைச்சர் குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு

SCROLL FOR NEXT