தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்!
தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
தற்போதைய செய்திகள்தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும்!
தென் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று(சனிக்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக அரசிதழில் வெளியீடு!