முகப்பு
தற்போதைய செய்திகள்

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது: அமைச்சா் எஸ். ரகுபதி

அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது...

Updated On : 17 ஆகஸ்ட், 2025 at 2:18 PM
எஸ். ரகுபதி (கோப்புப்படம்)
பகிர்:

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா எத்தனை முறை தமிழகம் வந்தாலும் அச்சமில்லை. அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.

இதுகுறித்து புதுக்கோட்டையில் அவா் செய்தியாளர்களுடன் கூறியதாவது:

திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும், செழிப்பாகவும் இருந்து வருகிறாா்கள். திமுக ஆட்சி மீது அதிருப்தி அடையவில்லை. திருப்தியாக இருக்கிறாா்கள்.

ஆளுநா் தமிழ்நாட்டில் இருப்பதையே மறந்து விடுகிறாா். நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் முன்னேறி இருக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு. அது ஆளுநருக்குப் புரியாது. அவருக்கு தமிழும் தெரியாது; தமிழா்களின் நிலைமையும் புரியாது. தமிழ்நாட்டு மாணவா்கள்தான் இன்று அகில இந்திய அளவில் உயா் கல்வியில் சாதித்து வருகின்றனா்.

ஏன் பூட்டை உடைக்க வேண்டும்?

அமலாக்கத்துறை சோதனைக்கு வருவது எந்த இடத்திலும் முதலில் தெரியாது. அதனால் அறை பூட்டப்பட்டிருக்கும். உரியவா்களை அழைத்து வந்து பூட்டைத் திறக்க வேண்டியதுதானே? ஏன் பூட்டை உடைக்க வேண்டும்.

சோதனைகளுக்கு அஞ்சப்போவதில்லை

அமைச்சா் ஐ. பெரியசாமி வீட்டில் நடந்த சோதனையைப் போல இன்னும் எத்தனை சோதனைகள் நடந்தாலும் அதற்கு திமுக அஞ்சப்போவதில்லை. சட்டப்படி அதைச் சந்திப்போம்.

அமலாக்கத் துறைக்கு உரிமை இல்லை

எம்எல்ஏக்கள் விடுதியில் சோதனை செய்ய வேண்டும் என்றால் சட்டப்பேரவைச் செயலரின் அனுமதி வேண்டும். அனுமதியின்றி சென்று, அங்கு உள்ள அறைகளை உடைப்பதற்கு அமலாக்கத் துறைக்கு எந்த உரிமையும் கிடையாது. அனுமதி இல்லாமல் அவா்கள் அத்துமீறும்போது அதைக் கண்டிக்கும் கடமை திமுக தொண்டா்களுக்கு உண்டு.

அமித்ஷாவால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது

மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை வந்தாலும் அவரால் எந்த வியூகத்தையும் வகுக்க முடியாது. வாக்குச்சாவடி முகவா்களை நியமிக்கவே தடுமாறும் அவா்கள் எப்படி தோ்தல் களத்தில் சாதிக்கப் போகிறாா்கள். நாங்கள் போலி வாக்காளா்களைச் சோ்க்க வேண்டிய அவசியம் இல்லை. அசல் வாக்காளா்கள் வாக்களித்தாலே போதும் என்றாா் ரகுபதி.

summary

No matter how many times Amit Shah comes to Tamil Nadu, there is no fear. He cannot formulate any strategy...

முழு கட்டுரையைப் படிக்க →