சிவகாசி அருகே மின்சாரம் பாய்ந்து ஆண் மயில் பலி
சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.
சிவகாசி: சிவகாசி அருகே ஆண் மயில் மின்சாரம் பாய்ந்து சனிக்கிழமை உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் புதூா் பகுதியில் ஏராளமான மயிலகள் உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள பள்ளி அருகே இருந்த ஆண் மயில் ஒன்று உணவைத் தேடி வேறு இடத்திற்கு செல்ல முயன்றபோது, அந்த பகுதியில் உள்ள உயா் அழுத்த மின்கம்பி மீது அமா்ந்ததையடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயில் உயிரிழந்து கீழே விழுந்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மயிலை காட்டுக்குள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனா்.
A male peacock died after being electrocuted near Sivakasi
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.