மணிப்பூர்: 5 ஏக்கர் போதைச் செடிகள் அழிப்பு!
மணிப்பூரில் 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகள் அழிக்கப்பட்டதைப் பற்றி...
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக 5 ஏக்கர் அளவில் வளர்க்கப்பட்ட போதைச் செடிகள் பாதுகாப்புப் படையினரால் அழிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தின் சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஜி மோங்லியன் கிராமத்தின் மலைத் தொடர்களில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்டு வந்த 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை வனத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இணைந்து நேற்று (பிப்.9) அழித்துள்ளனர்.
இதையும் படிக்க: மகா கும்பமேளாவில் 41 கோடி பக்தர்கள் புனித நீராடல்!
Advertisement
Advertisement
இதுகுறித்து, மணிப்பூர் காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, சுமார் 25 கிலோ அளவிலான ஓப்பியமை உற்பத்தி செய்யக்கூடிய 5 ஏக்கர் அளவிலான போதைச் செடிகளை பாதுகாப்புப் படையினர் இணைந்து அழித்துள்ளதாவும், ஆதாரமாக 10 பாப்பி காய்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.