தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா: பிரதமர் மோடி புகழாரம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என அவருக்கு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் இன்று(பிப்., 24) அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.
அரசியல் தலைவர்கள் பலரும் அவருக்கு மரியாதை செலுத்தியும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டும் வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஜெயலலிதாவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு இரக்கமுள்ள தலைவராகவும், சிறந்த நிர்வாகியாகவும் பரவலாகப் போற்றப்படுகிறார்.
பல சந்தர்ப்பங்களில் அவருடன் பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம். மக்கள் நல முயற்சிகளுக்கு அவர் எப்போதும் ஆதரவாக இருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.