கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கிணற்றில் மூழ்கி சிறுத்தை பலி!

ஹிமாசல பிரதேசத்தில் கிணற்றில் மூழ்கி சிறுத்தை பலியானதைப் பற்றி...

DIN

ஹிமாசல பிரதேசத்தில் கிணற்றில் மூழ்கி பலியான நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹமிர்பூர் மாவட்டத்தின் பாரேரி கிராமத்தின் கிணற்றில் நேற்று (பிப்.24) இறந்த நிலையில் சிறுத்தையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சிறுத்தையின் சடலத்தை மீட்டு உடல் கூராய்வு சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க: ரூ.60,000-க்கு குழந்தையை விற்க முயன்ற 4 பேர் கைது!

இதனைத் தொடர்ந்து, அந்த சோதனையில் சிறுத்தை கிணற்று நீரில் மூழ்கியதினால்தான் பலியாகியுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. அதன் பிறகு போலீஸார் அந்த சிறுத்தையின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

முன்னதாக, போரஞ்ச் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி மக்கள் கூண்டமைத்து விலங்குகளை பிடிக்குமாறு வனத்துறையினரை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT