தற்போதைய செய்திகள்

மாட்டுப் பொங்கல்: பெரிய கோயிலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

DIN

மாட்டுப் பொங்கலையொட்டி பெரிய கோயிலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ள நிலையில், பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோவில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் அழகை காண தினமும் உள்நாடு - வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

இதையும் படிக்க: தென் கொரிய அதிபர் மீதான கைது நடவடிக்கை மீண்டும் தோல்வி!

தற்போது தொடர் விடுமுறை என்பதாலும் மாட்டுப் பொங்கல் என்பதாலும் அதிகாலை முதலிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலில் குவிந்துள்ளனர்.

மேலும், நீண்ட வரிசையில் நின்று பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT