தை அமாவாசை: பூம்புகாரில் ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு!
மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
பூம்புகார்: மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை நாள்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் விளக்குகின்றன.
மேலும் காவிரி கடலோடு சங்கமிக்கும் பூம்புகார் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்குச் சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது.
Advertisement
Advertisement
தை அமாவாசையையொட்டி புதன்கிழமை அதிகாலை முதலே தமிழகம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரை மற்றும் கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை காவிரியில் இட்டு வழிபட்டனர்.
பூம்புகார் கடற்கரைப் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் விஜயா தலைமையில் காவல்துறையினர் செய்திருந்தனர். அம்மாவாசை நாளான்று சங்கமத்துறையில் நீராடும் பெண் பக்தர்கள் தங்களது உடைமைகளை மாற்றிக்கொள்ள ஏதுவாக, தற்காலிக தனியறைகள் அமைக்கப்படுவது வழக்கம், ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படாததால், தங்கள் உடைகளை மாற்ற பெண்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.