முகப்பு
தற்போதைய செய்திகள்

ஜகபர் அலி உடலைத் தோண்டியெடுத்து ஆய்வு செய்ய உத்தரவு!

சமூக செயற்பாட்டாளா் ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கு தொடர்பாக...

Updated On : 30 ஜனவரி, 2025 at 11:52 AM
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
பகிர்:

சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள பகுதிகளில் நடந்து வந்த கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடி வந்த வெங்களூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ஜகபா் அலி (58) கடந்த ஜன. 17ஆம் தேதி லாரி ஏற்றிக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக குவாரி உரிமையாளா்கள் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

இதற்கிடையே ஜகபா்அலி கொலை வழக்கு விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதன் தொடா்ச்சியாக வழக்கு தொடா்பான ஆவணங்கள் அனைத்தும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: ராகுல் மீதான அவதூறு வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

இதற்கிடையே திருமயம் காவல் ஆய்வாளா் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக காவல் துணைத் தலைவா் அருண்குமாா் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இவ்வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது.

ஜகபர் அலியின் உடலைத் தோண்டி எடுத்து, காவல் துறை பாதுகாப்புடன் புதைத்த இடத்திலேயே எக்ஸ்-ரே எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், உடலைத் தோண்டி எடுக்கும்போது புகைப்படங்கள் எடுக்க அனுமதிக்கக் கூடாது என்றும் ஊடகங்கள் உள்ளிட்ட யாருக்கும் அனுமதி தரக் கூடாது என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →