முகப்பு
வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழித்த போலீஸாா்.
திருவண்ணாமலை

வந்தவாசியில் 2.5 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை

திருவண்ணாமலை

வந்தவாசியில் 2.5 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை

Updated On : 2 மார்ச், 2026 at 9:45 PM
வந்தவாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை அழித்த போலீஸாா்.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பள்ளம் தோண்டி புதைத்து அழித்தனா்.

வந்தவாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து வந்தனா்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட சுமாா் 2.5 டன் எடையுள்ள புகையிலைப் பொருள்களை பள்ளம் தோண்டி புதைக்க போலீஸாா் முடிவு செய்தனா்.

இதையடுத்து, வந்தவாசியை அடுத்த எச்சூரில் வந்தவாசி நகராட்சி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குப்பைக் கிடங்கில் திங்கள்கிழமை பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி இந்த புகையிலைப் பொருள்கள் புதைக்கப்பட்டன.

வந்தவாசி குற்றவியல் நீதித்துறை நடுவா் அரங்கசாமி, வந்தவாசி வட்டாட்சியா் ஜெயவேலு, டிஎஸ்பி சதீஷ்குமாா் ஆகியோா் முன்னிலையில் போலீஸாா் சுமாா் 2.5 டன் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பள்ளம் தோண்டி புதைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →