வால்பாறை: கனமழை காரணமாக வால்பாறையில் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு வியாழக்கிழமை(ஜூன் 26) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் வியாழக்கிழமை (ஜூன் 26) முதல் ஜூலை 1-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும்.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜூன் 26) ஓரிரு இடங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கோவை மாவட்டம், வால்பாறையில் பெய்து வரும் கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வியாழக்கிழமை (ஜூன் 26) விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.