முகப்பு
தற்போதைய செய்திகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக பதவியேற்ற கணவர்கள்!

சத்தீஸ்கரில் பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றதைப் பற்றி...

Updated On : 4 மார்ச் 2025, 8:00 pm IST
கோப்புப் படம்
பகிர்:

சத்தீஸ்கரில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பெண் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

கபிர்தாம் மாவட்டத்தின் பரஸ்வரா கிராமத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்தலின் மூலம் அக்கிராமத்தின் மொத்தமுள்ள 11 வார்டுகளில் 6 வார்டுகளில் பெண்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.3) நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்து வெளியான விடியோவில் அந்த 6 பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களது கணவர்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற ஆண் பிரதிநிதிகளுக்கும் பஞ்சாயத்து செயலாளர் பதவி பிரமாணம் செய்து வைப்பது பதிவாகியிருந்தது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: மகாராஷ்டிர அமைச்சரின் ராஜிநாமா ஏற்பு!

இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து, பண்டாரியா ஜன்பத் பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்த விவகாரம் குறித்து விசாரிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளாதாக கபிர்தாம் மாவட்ட பஞ்சாயத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் திரிபாதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதிவாசிகளும் சமூக ஆர்வலர்களும் இந்த சம்பவம் பெண்களின் முன்னேற்றத்தைத் தடுப்பதாகவும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் இல்லையென்றால் இந்த சம்பவம் ஒரு தவறான முன்னுதாரணமாக மாறி இதுபோன்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வழிவகுக்கும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments