முகப்பு
தற்போதைய செய்திகள்

பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது!

மகாராஷ்டிரத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டதைப் பற்றி...

Updated On : 8 மார்ச் 2025, 2:32 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச்.4 அன்று நள்ளிரவு லாத்தூரின் அவுஸா நகரத்திலுள்ள ஒரு கடையின் வாசலில் பிச்சைக்காரர் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த யோகேஷ் சித்ராம் புட்டே என்பவர் அந்த பிச்சைக்காரர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதையும் படிக்க: மகளிர் நாள்: பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தைக் கையாளும் 6 பெண்கள் யார்?

Advertisement

Advertisement

இதனால், படுகாயமடைந்த அந்த பிச்சைக்காரர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவர் மேல் சிகிச்சைக்காக லாத்தூர் மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட யோகேஷ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், அந்த நபர் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதினால் இவ்வாறு செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments