கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

ரமலான் சிறப்பு ரயில்கள்: முன்பதிவு தொடங்கியது!

ரமலான் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடக்கம்.

DIN

ரமலான் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

ரமலான் பண்டிகையையொட்டி கூட்ட நெரிசலைக் குறைக்க திருச்சி - தாம்பரம் ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06048) வரும் 29, 30, 31 ஆம் தேதி வரையும், மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி ஜன் சதாப்தி சிறப்பு விரைவு ரயிலானது (06047) வரும் 29, 30, 31 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம் - கன்னியாகுமரி விழாக்கால சிறப்பு விரைவு ரயிலானது (06037) வரும் 28 ஆம் தேதியும், மறுவழித்தடத்தில் கன்னியாகுமரி - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06038) வரும் 31 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: தமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம்!


ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் - போத்தனூா் இடையே இயக்கப்படும் ரயில் வரும் மாா்ச் 28-ஆம் தேதி இரவு 11.50-க்கு சென்னை சென்ட்ரலிலிருந்து புறப்பட்டு, மறுநாள் காலை 9 மணிக்கு போத்தனூா் சென்றடையும்.

மறுவழித்தடத்தில் மாா்ச் 31-ஆம் தேதி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று(மார்ச் 23) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT