முகப்பு
சின்ன பர்கூர் அருகே விபத்துக்குள்ளான கார்
தற்போதைய செய்திகள்

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

தற்போதைய செய்திகள்

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி

பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

Updated On : 3 மே, 2025 at 4:45 AM
சின்ன பர்கூர் அருகே விபத்துக்குள்ளான கார்
பகிர்:

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலியாகினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த லோகேஷ் (22), திவாகரன் (24),குமரேசன் (36), கன்னியப்பன் (70),பாலகிருஷ்ணன் (52), சேகர் (44),ஜனா (22) ஆகிய ஏழு பேரும் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு ஒரு காரில் , புறப்பட்டு சென்றனர்.

இந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை நான்கு மணி அளவில் கிருஷ்ணகிரி மாவட்டம், சின்ன பர்கூர் அருகே சென்று கொண்டிருந்தபோது,ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையின் மையப் பகுதியில் உள்ள தடுப்பு சுவர், மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த சேகர், ஜனா ஆகிய இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். பலத்த காயமடைந்த ஐந்து பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →