அடுத்த 2 மணி நேரத்தில் 13 மிதமாந மழைக்கு வாய்ப்பு.  
தற்போதைய செய்திகள்

அடுத்த 2 மணி நேரத்தில் எந்தெந்த மாவட்டங்களில் கனமழை?

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய பகுதிகளில் இருந்து தென்மேற்கு பருவமழை வியாழக்கிழமை பிற்பகலுக்குள் விலகக்கூடும். அதேசமயம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், கேரளம், மாஹே, தெற்கு உள்கர்நாடகம், ராயலசீமா, தெற்கு கடலோர ஆந்திர பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கக்கூடும்.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த முதல் மிக பலத்த மழையும், கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .

இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) கடலூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் ஆகிய 13 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின்னலுடன் கூடிய பலத்த மழை

சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை இரவு லேசான மழை பெய்து வந்த நிலையில், வியாழக்கிழமை இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.

3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில், தென் மாவட்டங்களில் புதன்கிழமை முதல் விடியவிடிய கனமழை பெய்து வருவதால், நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மெல்ல சிரித்தாள் ஒன்று சொல்ல நினைத்தாள்... கரிஷ்மா டன்னா!

உடலும் உள்ளமும்... சைத்ரா!

மஞ்சள் மகிமை... த்வனி பானுஷாலி!

ரசிகர்களின் உணர்ச்சிகளை வியாபாரம் ஆக்குவதா? விமர்சனத்துக்கு உள்ளான கோலி!

வடகிழக்குப் பருவமழை: அக். 24-ல் முதல் புயல் சின்னம்!

SCROLL FOR NEXT