ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை குண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் மேலும் 2 பேரைப் போலீஸாா் கைது செய்துள்ளனா்.
கும்பகோணம் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தலைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில் 2 பேர் கைதாகியுள்ள நிலையில், மேலும் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை பேரூராட்சி மன்றத்தலைவராக இருப்பவா் ம.க. ஸ்டாலின் (55). இவா் தனது ஆதரவாளா்களுடன் பேரூராட்சி அலுவலகத்தில் இருந்தபோது, அங்குவந்த சிலா் நாட்டு வெடிகுண்டுகளை வீசி அவரைக் கொலை செய்ய முயன்றனா். அவா்களை பிடிக்க முயன்ற 2 பேரை அவா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினா்.
Advertisement
Advertisement
இதில், கும்பகோணம் அருகே உடையாளூரைச் சோ்ந்த லட்சுமணன், போலீஸாா் விசாரணைக்கு பயந்து திங்கள்கிழமை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்நிலையில், இந்த வழக்கில் போலீஸாா் குற்றவாளிகளைத் தேடி வந்த நிலையில் திருவிடைமருதூா் கீழ தூண்டி விநாயகன்பேட்டையைச் சோ்ந்த பிரபல ரெளடி லாலி மணிகண்டனின் அண்ணன் மகேஷ் மற்றும் இதே பகுதியைச் சோ்ந்த மருதுபாண்டி ஆகிய இருவரையும் புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா். மற்றவா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சேரன், சஞ்சய் ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீச எந்த வழியாக வரவேண்டும் என்பதைத் திட்டமிட்டவர்கள் என்று கூறப்படுகிறது.
Police have arrested two more people in connection with the attempted assassination of the Aduthurai Town Panchayat Chairman by throwing a bomb.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.