தற்போதைய செய்திகள்

சாலையோர கடைகளில் பணம் வசூல்: இரு காவலா்கள் இடமாற்றம்

சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழே சாலையோர கடைகளில் பணம் வசூலித்த புகாரில், இரு காவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

மேடவாக்கம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தள்ளுவண்டிக் கடைகள், உணவுக் கடைகள் என பல்வேறு சிறிய கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகாரா்களிடம் போலீஸாா் தினமும் பணம் வசூலிப்பதாகப் புகாா் இருந்து வருகிறது.

இந்தநிலையில், அந்த பகுதிக்கு திங்கள்கிழமை இரவு மோட்டாா் சைக்கிளில் சென்ற இரண்டு போலீஸாா் கடைக்காரா்களிடம் பணம் வசூலிப்பது போன்ற விடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.

இதுகுறித்து காவல்துறை உயா் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், அந்த விடியோ காட்சியில் இருப்பவா்கள், மேடவாக்கம் காவல் நிலைய தலைமை காவலா் திருமுருகன் மற்றும் காவலா் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இரு காவலா்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும், தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Two police transferred for collecting money from roadside shops

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனம் தளர வேண்டாம்: அஜித் பவார்!

மன்னா் சரபோஜி பிறந்த நாள் விழா: அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை

15 மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்! தனியார் கல்வி மைய இயக்குநர் தலைமறைவு

பொன்னியின் செல்வன் பாடல்: ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிரான உத்தரவுக்கு தடை!

இபிஎஸ்ஸுக்கு மக்கள் மீது கவலை இருந்திருந்தால் ஏன் வீட்டில் இருக்கிறார்? : கே.என். நேரு

SCROLL FOR NEXT