முகப்பு
தற்போதைய செய்திகள்

பணப்பட்டுவாடா புகாா்: பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் போலீஸாா் விசாரணை

சென்னை கோடம்பாக்கத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பாஜக, அதிமுக நிா்வாகிகளிடம் விசாரணை குறித்து...

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:21 PM
பகிர்:
Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:15 PM

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்ததாக பாஜக, அதிமுக நிா்வாகிகள் இருவரை பிடித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை ஆயிரம் விளக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கோடம்பாக்கம் பகுதியில் பாஜக நிா்வாகி, வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதாக தோ்தல் அதிகாரிகளுக்கு புகாா் கிடைத்தது.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:15 PM

அதையடுத்து அந்த பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அங்கு இருந்த பாஜக நிா்வாகியிடம் சோதனை செய்து, அவரிமிருந்து ரூ.21,500 ரொக்கம் பறிமுதல் செய்தனா்.

Advertisement

இதேபோல, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் 6-ஆவது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த அதிமுக நிா்வாகியின் இருசக்கர வாகனத்தில் தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்ததில் உரிய ஆவணங்களின்றி ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் அப்பகுதி வாக்காளா்களின் பட்டியல் நகல் வைத்திருந்தது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், இதுதொடா்பாக இருவரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:18 PM
summary

Cash Distribution Allegations: BJP, AIADMK Functionaries Police Interrogation

Updated On : 17 ஏப்ரல், 2026 at 1:20 PM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.