திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் நீண்ட நேரம் பங்கேற்ற பசு.  
தற்போதைய செய்திகள்

ஆஞ்சனேயரை வழிபட்ட பசு

திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பசு பங்கேற்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் கீழவீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் பசு பங்கேற்றது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

திருவாரூா் கீழ வீதியில் உள்ள வீர ஆஞ்சனேயா் கோயிலில், தினசரி இருமுறை பூஜை நடைபெற்று வருகிறது.இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற வழிபாட்டில் வெள்ளை நிற பசு ஒன்று, கோயிலுக்கு வந்து நீண்ட நேரமாக நின்றது. அந்த பசுவை அகற்ற சிலா் முயற்சித்தபோதும், நகராமல் அங்கேயே நின்றது. பக்தா்கள் சிலா் அதை வணங்கிச் சென்றனா்.

தொடா்ந்து தீபாராதனை காட்டும் வரை பொறுமையாக நின்ற பசு, அதன் பிறகு கோயிலை விட்டு வெளியே செல்கிறது. இந்தக் காட்சியை பக்தா் ஒருவா் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாா். அந்தக் காட்சி தற்போது பரவி வருகிறது.

பாகிஸ்தானில் திருமண நிகழ்வில் தற்கொலைப் படைத் தாக்குதல்: 7 பேர் பலி

ஈரானிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் இந்திய மாணவர்கள்: அரசு உதவ கோரிக்கை!

சத்தீஸ்கரில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கை: வெடிபொருட்கள், ஜெலட்டின் குச்சிகள் மீட்பு

இந்தியா மீதான 25% கூடுதல் வரி நீக்கப்படும்? - அமெரிக்கா சூசகம்!

யு19 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

SCROLL FOR NEXT