நாகாலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.0-ஆகப் பதிவு
நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
நாகாலாந்தில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
நாகாலாந்தின் கிஃபிரேவில் வெள்ளிக்கிழமை(ஜன.23) காலை 3.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 4.0-ஆக பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 90 கி.மீ ஆழத்தில் அதிகாலை 4.17 மணியளவில் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
நிலநடுக்கத்தின் அட்சரேகை 25.74 வடக்கு மற்றும் தீர்க்கரேகை 94.84 கிழக்கில் அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
90 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகவோ அல்லது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ உடனடி தகவல் இல்லை.
summary