திபெத்தில் நிலநடுக்கம் 
தற்போதைய செய்திகள்

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவு

திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

திபெத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.

சீனாவில் தொலைதூர இமையலைப் பகுதியான திபெத்தில் இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை காலை 2.30 மணியளவில் திபெத்தின் நிலப்பரப்பில் இருந்து சுமார் 25 கி.மீட்டர் ஆழத்தில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஆழமற்ற நிலநடுக்கங்கள் பொதுவாக ஆழமான நிலநடுக்கங்களை விட அதிக ஆபத்தானவை. ஏனெனில், ஆழமற்ற நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பை அடைய குறைந்த தூரமே பயணிக்கின்றன. இதன் விளைவாக, தரை அதிர்வு வலுவாக இருப்பதோடு, அதிக கட்டமைப்பு சேதங்களும், அதிக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

திபெத் மற்றும் நேபாளத்தின் நிலப்பரப்பானது பூமிக்கு அடியிலுள்ள இந்திய மற்றும் யுரேசிய டெக்டோனிக் தகடுகள் உரசிக்கொள்ளும் பெரும் புவியியல் பிளவுக் கோட்டின் மீது அமைந்துள்ளது. இதனால், இவ்விரு நாடுகளிலும் எப்போது வேண்டுமானாலும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற அபாயமுள்ளது குறிப்பிடத்தக்கது .

புவித்தட்டு மோதல்களால் திபெத்திய பீடபூமி நில அதிர்வு செயல்பாடுகளால் வகைப்படுத்தப்படுகிறது.

பீடபூமிக்குள் ஏற்படும் பிளவுகள் கிடைமட்ட நகர்வு மற்றும் செங்குத்து நகர்வு வழிமுறைகளுடன் தொடர்புடையவை. வடக்கு-தெற்கு திசையில் செல்லும் பள்ளங்கள், கிடைமட்ட நகர்வு பிளவுகள் மற்றும் ஜிபிஎஸ் தரவுகள்படி, இந்த பீடபூமி கிழக்கு-மேற்காக நீண்டுள்ளது.

வடக்குப் பகுதியில், கிடைமட்ட நகர்வு பிளவுகள் முக்கிய புவித்தட்டு பாணியாக உள்ளது, அதே சமயம் தெற்கில், வடக்கு-தெற்கு திசையில் செல்லும் செங்குத்து பிளவுகளில் ஏற்படும் கிழக்கு-மேற்கு நீட்சி முக்கிய புவித்தட்டு களமாக உள்ளது.

முதன்முதலில் 1970-களின் பிற்பகுதியிலும் 1980-களின் முற்பகுதியிலும் செயற்கைக்கோள் படங்களைப் பயன்படுத்தி தெற்கு திபெத்தில் வடக்கு-தெற்கு திசையில் செல்லும் ஏழு பிளவுகளும், செங்குத்து பிளவுகளும் அடையாளம் காணப்பட்டன.

திபெத்தில் 8.0 அல்லது அதற்கு இணையான ரிக்டர் அளவு கொண்ட மிகப்பெரிய நிலநடுக்கங்கள் கிடைமட்ட நகர்வு பிளவுகளில் ஏற்படுகின்றன. செங்குத்து நகர்வு பிளவுகளால் ஏற்படும் நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவில் சிறியவை; 2008-இல், 5.9 முதல் 7.1 ரிக்டர் அளவு கொண்ட ஐந்து செங்குத்து நகர்வு பிளவு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

பூமி அமைப்பு மிகவும் சிக்கலானது, மேலும் பூகம்பங்களை நாம் கணிக்க முடியாது. இருப்பினும், திபெத்தில் பூகம்பங்களுக்கு என்ன காரணம் என்பதை நன்கு புரிந்துகொள்ளவும், பூகம்பங்களால் ஏற்படும் நடுக்கம் மற்றும் தாக்கங்களை நன்கு புரிந்துகொள்ளவும் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என்று டெக்சாஸ் பல்கலைக்கழக புவியியல் அறிவியல் பேராசிரியர் கார்ப்ளஸ் கூறியுள்ள்ளது குறிப்பிடத்தக்கது .

An earthquake of magnitude 4.5 struck Tibet on Friday at about 2: 30 am, a statement by the National Centre for Seismology (NCS) said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

501 பயனாளிகளுக்கு ரூ.11.68 கோடி நலத்திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

ஒற்றை விரலில் ‘உங்கள்’ வலிமை!

மோசடி புகாரில் அமைச்சரின் முன்னாள் உதவியாளா் கைது

தனுசு ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!

காஞ்சிபுரத்தில் அரசு விதிகளை மீறிய வாகனங்கள், ஒரு மாதத்தில் ரூ. 10.31 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT