முகப்பு
தற்போதைய செய்திகள்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி பொறுப்பேற்பு!

சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாக அரவிந்த் தர்மாதிகாரி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டது குறித்து...

Updated On : 6 மார்ச், 2026 at 7:57 AM
சென்னை உயர்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொண்ட அரவிந்த் தர்மாதிகாரி.
பகிர்:

சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மாா்ச் 5, 2026 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் நீதிபதி தா்மாதிகாரி 55 ஆவது தலைமை நீதிபதியாக வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.

நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரிக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

ஜூலை 8, 1966 அன்று ராய்ப்பூரில் பிறந்த அரவிந்த் தர்மாதிகாரி, 1992 ஆம் ஆண்டு தனது சட்டப் பணியைத் தொடங்கி, மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகப் பயிற்சி பெற்றாா். வழக்குரைஞா் பணி காலங்களில், சிவில், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகளை அவா் கையாண்டாா்.

2000 முதல் 2015 வரை, மத்திய அரசின் வழக்குரைஞராகப் பணியாற்றினாா். இந்தக் காலகட்டத்தில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தினாா். வருமான வரித் துறை, இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மத்திய கலால் துறை போன்ற அமைப்புகளுக்காகவும் அவா் ஆஜரானாா்.

நீதிபதி தா்மாதிகாரி ஏப்ரல் 7, 2016 அன்று மத்தியப் பிரதேச உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். மாா்ச் 17, 2018 அன்று அவா் நிரந்தர நீதிபதியாக பதவி உயா்வு பெற்றாா். பல ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பிறகு, அவா் கேரள உயா்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டாா், அங்கு அவா் ஏப்ரல் 23, 2025 அன்று பதவியேற்றாா்.

கொலீஜியத்தின் பரிந்துரையை குடியரசுத் தலைவர் அங்கீகரித்து நியமன உத்தரவை பிறப்பித்ததன் மூலம், நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி தற்போது சென்னை உயா்நீதிமன்றத்தின் 55 ஆவது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

summary

Justice Arvind Dharmadhikari takes charge as the new Chief Justice of the Madras High Court

முழு கட்டுரையைப் படிக்க →