தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் ஆதரவு?
தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக வட்டார தகவல்கள் குறித்து...
புது தில்லி: தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கு, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது. இதில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. 108 இடங்களை கைவசம் வைத்துள்ள தவெகவுக்கு கூடுதலாக 10 முதல் 11 இடங்கள் தேவைப்படுகிறது.
திமுக 59, அதிமுக 47, காங்கிரஸ் 5, பாமக 4, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2, பாஜக, தேமுதிக, அமமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன.
Advertisement
Advertisement
ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவைப்படும் நிலையில், தற்போது தவெகவிடம் 10 இடங்கள் குறைவாக இருக்கிறது. இருப்பினும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் தவெக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
திமுக, அதிமுக, பாஜக தவிா்த்து, வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், பாமக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், முஸ்லிம் லீக், தேமுதிக, அமமுகவில் சிலவற்றை தனது கூட்டணிக்கு கொண்டுவர தவெக தரப்பில் தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் ஒரு மதச்சார்பற்ற அரசை அமைப்பதற்கு, தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவளிக்க தமிழக காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெக-விற்கு ஆதரவளிக்கும் இந்த முடிவு, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் நடைபெற்ற தமிழக காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் அவசரக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாகவும், தவெக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையக்கூடாது என்ற நிபந்தனையுடன் காங்கிரஸ் ஆதரவு வழங்க முன்வந்துள்ளதாகவும், ஆதரவு கடிதத்தை புதன்கிழமை(மே 6) விஜய்யிடம் காங்கிரஸ் கொடுக்க இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தவெகவிற்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுப்பதற்காக, தமிழக விவகாரங்களுக்கான அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் இந்தக் கூட்டத்தைக் கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Congress Support for TVK to Form Government
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.