செய்திகள்

இன்ஸ்டாகிராம் ஒரு நரகம்; அதிலிருந்து வெளியேறுகிறேன்: ஜஸ்டின் பைபர்!

சமூக வலைத்தளம் ஒரு நரகம்! அந்த நரகத்திலிருந்து தான் பலமுறை வெளியேற முயன்றும் முடியாமல் தவித்ததாகவும், தற்போது தான் அதிலிருந்து தப்பிக்க விடிவு காலம் பிறந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

கார்த்திகா வாசுதேவன்

கிராமி விருது பெற்ற பாப் பாடகர் 'ஜஸ்டின் பைபர்' சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்குவதாக அறிவித்திருக்கிறார். வெறும் அறிவிப்பு மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் ஒரு பிசாசு! என்று அதைச் சாடி விட்டு அதிலிருந்து வெளியேறி இருக்கிறார். மேலும் சமூக வலைத்தளம் ஒரு நரகம்! அந்த நரகத்திலிருந்து தான் பலமுறை வெளியேற முயன்றும் முடியாமல் தவித்ததாகவும், தற்போது தான் அதிலிருந்து தப்பிக்க விடிவு காலம் பிறந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

செவ்வாய் அன்று லண்டனில் ஒரு மேடை நிகழ்ச்சியில் பேசும் போது மீண்டும் மேற்சொன்னதையே உறுதிப்படுத்தி இருக்கிறார். நான் 90 சதம் உறுதியாகச் சொல்வேன். இந்து போன்ற சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் ஈடுபடும் போது நாம் நரகத்திற்குத் தான் அனுப்பப்படுகிறோம். சொல்லப் போனால் இன்ஸ்டாகிராம் சர்வரின் உள்ளே வைத்துப் பூட்டப் படுகிறோம், இப்படித் தான் நான் டிஜிட்டல் மீடியாவில் சிக்கிக் கொண்டேன். பிறகு அதிலிருந்து மீண்டு எழுந்து நான் என் வழியே செல்ல நினைத்தாலும் என்னால் முடியவில்லை. என்றும் புலம்பி இருக்கிறார்.

கடந்த ஆகஸ்டில் இன்ஸ்டாகிராமில் இருந்து தற்காலிகமாக வெளியேறிய ஜஸ்டின் இரு வாரங்களில் மீண்டும் தனது முன்னாள் காதலி செலினா கோம்ஸ்காக இன்ஸ்டாகிராம் கணக்கில் உள் நுழைந்திருக்கிறார். பிறகு என்ன நடந்ததோ? உடனடியாக தனது இன்ஸ்டாகிராம் கணக்கை முடிவுக்கு கொண்டு வந்து அங்கிருந்து வெளியேறி விட்டதாக அறிவித்திருக்கிறார்.

ஜஸ்டின் பைபருக்கும் அவரது முன்னாள் காதலி செலினா கோம்ஸுக்கும் இடையில் நடந்த இன்ஸ்டாகிராம் சண்டைக்குப் பின் தான் ஜஸ்டினின் இந்த உலகப் புகழ் பெற்ற வெளியேற்றம் நடைபெற்றதாக அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொந்த நாட்டை அவமதிக்கும் காங்கிரஸ்: பிரதமா் மோடி கடும் சாடல்

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

ஏழுமலையான் தரிசனம்: 16 மணிநேரம் காத்திருப்பு!

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

SCROLL FOR NEXT