டூவிலரில் சென்றவர்களை விரட்டிச் சென்று மறைந்த புலி! வைரல் விடியோ
காட்டிலாக அலுவலர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தில் சரணாலயத்தின் உள்ளே ரோந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களை விரட்டிக் கொண்டு புலியொன்று சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற காட்சி அதில் பதிவு செ
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் இருக்கும் முத்தங்கா வனவிலங்கு சரணாலயத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ ஒன்று நேற்றெல்லாம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது. அந்த விடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்றால்:
காட்டிலாக அலுவலர்கள் இருவர் தங்களது இரு சக்கர வாகனத்தில் சரணாலயத்தின் உள்ளே ரோந்து சென்று கொண்டிருக்கும் போது அவர்களை விரட்டிக் கொண்டு புலியொன்று சாலையின் குறுக்கே பாய்ந்து சென்ற காட்சி அதில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த விடியோவை பதிவு செய்தவர்கள் காடுகள் மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பிற்கென இயங்கும் தன்னார்வ அமைப்புகளில் ஒன்றைச் சார்ந்தவர்கள். அவர்க விடியோவைப் பதிவு செய்ததோடு அதைத் தங்களது அதிகாரப்பூர்வ முகநூல் தளமான (FAWPS) Forests and Wildlife Protection Society எனும் இணையப் பக்கத்தில் பதிவேற்றியும் இருந்தனர். அந்த விடியோ தான் இன்று வைரலாகிக் கொண்டிருக்கிறது.
இந்த விடியோ கேரள மாநிலம் பயநாட்டில் பதிவானது என்று அச்சு ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்க, கர்நாடகாவைச் சேர்ந்த டி வி 5 ஊடகம் இது நிகழ்ந்தது மைசூரு பந்திப்பூர் காட்டுப் பகுதியில் என்று செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் இந்த காட்சி பதிவானது எந்த வனவிலங்கு சரணாலயத்தில் என்றால் அது கேரளா, வயநாட்டுப் பகுதியில் உள்ள வனவிலங்கு சரணாலயத்தில் தான் என்பதாகத் தகவல்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.