'ஒவ்வொரு முறையும் வித்தியாசமான அனுபவம்' - லடாக்கில் பனி ஏறும் விழா!
ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் மலையேறுதல் சங்கம் சார்பில் பனி ஏறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் மலையேறுதல் சங்கம் சார்பில் பனி ஏறும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பனி சூழ்ந்த மலைத்தொடர்களால் நிறைந்த லாடக் பகுதி சுற்றுலா பயணிகளின் விருப்பமான இடங்களில் ஒன்றாக உள்ளது. முக்கியமாக சாகசப் பயிற்சியில் ஆர்வம் கொண்டவர்கள் லடாக் போன்ற பகுதிகளில் மலையேறுதலில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கென லடாக் பகுதிகளில் பல்வேறு மலையேற்ற நிறுவனங்கள் உள்ளன. மலையேற்றத்தின்போது அதற்கான பயிற்சிகளையும், வழிமுறைகளையும் அந்நிறுவனங்கள் வழங்குகின்றன.
இந்நிலையில், லடாக் மலையேறுதல் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் கேங்லஸ் கிராமத்தில் பனி ஏறும் விழாவை ஏற்பாடு செய்கிறது. குறிப்பாக சாகச வீரர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை கேங்லஸ் கிராமத்தில் பனி ஏறும் விழா நடைபெற்றது. இந்த கிராமத்தில் ஒரு அழகிய பனி கோபுரம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சாகச வீரர்கள் பலர் ஆர்வத்துடன் இதில் கலந்துகொண்டு மலையேறினர். புதிதாக பலரும் மலையேறுவதில் ஆர்வம் காட்டியதாகவும், இந்த ஆண்டு பெண்களுடன் அதிகளளவில் இதில் கலந்துகொண்டதாகவும் மலையேறுதல் சங்கத்தினர் தெரிவித்தனர்.
ஒவ்வொரு முறையும் லாடக் வரும்போது, மலையேற்ற நிகழ்வில் பங்கேற்கும்போது வித்தியாசமான அனுபவத்தை உணர்வதாக விழாவில் பங்கேற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.