செய்திகள்

மனச்சோர்விலிருந்து விடுபட வேண்டுமா? இந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்!

DIN

மனச்சோர்வு நவீன கால வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருக்கிறது. மனச்சோர்வை போக்குவதற்கு ஆலோசனைகள், மருத்துவ சிகிச்சை முறைகள் இருந்தாலும், அந்த சமயத்தில் சரியான உணவுகளை சாப்பிடும்பட்சத்தில், மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

மனச்சோர்வை எதிர்கொள்ளும்போது உடனடி அதிகபட்ச நன்மைகளைப் பெற சில உணவுகளை தொடர்ந்து சாப்பிட ஊட்டச்சத்து நிபுணரும் டயட் போடியத்தின் நிறுவனருமான டி.டி. ஷிகா மகாஜன் அறிவுறுத்துகிறார். 

மனச்சோர்வின்போது எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம். 

அக்ரூட் பருப்புகள்:

அக்ரூட் பருப்புகளை அளவோடு சாப்பிடும்போது, ​​அவை இதயத்திற்கு ஆரோக்கியமான மோனோசேச்சுரேட்டட் கொழுப்புகள் மற்றும் புரதத்தைத் தருகின்றன. அதேபோன்று அவற்றில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் சிறந்த தாவர அடிப்படையிலான ஆதாரங்களில் ஒன்று. இது மூளையின் ஆரோக்கியத்தைப் பராமரிக்க உதவுகிறது.

தானியங்கள்:

மனச்சோர்வை எதிர்க்கும் உணவுகளில் தானியங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதில் உள்ள ஃபைபர் கார்போஹைட்ரேட்டுகள் மனநிலையை விரைவாக மேம்படுத்த உதவுகின்றன. பழுப்பு அரிசி, பார்லி, இனிப்பு உருளைக்கிழங்கு உள்ளிட்டவைகளையும் உணவாக எடுத்துக்கொள்வது சிறந்தது.

மஞ்சள்:

மிகச்சிறந்த நோய் எதிர்ப்பு மருந்தாக இருக்கும் மஞ்சள், உங்களது மனநிலையை சீராக வைத்துக்கொள்ள உதவும் சிறந்த மருந்து. உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும், மஞ்சள் பல சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளன. 

கிரீன் டீ:

கிரீன் டீ ஆன்டிஆக்ஸிடன்ட்களின் சிறந்த மூலமாகும். ஆனால், மனச்சோர்வை எதிர்கொள்ளும் திறன் என்று பார்த்தால் கிரீன் டீ-யில் உள்ள தியானைன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. தேநீர் இலைகளில் இயற்கையாகவே இருக்கும் ஒரு அமினோ அமிலம் தியானைன். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கிறது.

குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள்: குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்களான ஸ்கிம் பால், தயிர், குறைந்த கொழுப்புள்ள பன்னீர் மற்றும் பிற பால் பொருட்கள் ஆகியவற்றில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் புரதம் அதிகம். மனச்சோர்வை எதிர்கொள்வது உட்பட பல்வேறு காரணங்களுக்காக இவற்றை உணவாக எடுத்துக்கொள்ளலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT