100 கோடிப் பயனாளர்களைக் கடந்த ‘டிக்டாக்’ செயலி 
செய்திகள்

100 கோடிப் பயனாளர்களைக் கடந்த ‘டிக்டாக்’ செயலி

பிரபல செயலிகளில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருக்கிறது.

தினமணி

பிரபல செயலிகளில் ஒன்றான ‘டிக்டாக்’ செயலியை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை 100 கோடியைக் கடந்திருக்கிறது.

இசையுடன் நடனம் மற்றும் தனித்திறன்களை விடியோ மூலம் வெளிப்படுத்தும் செயலியான டிக்டாக் உலகம் முழுவதும் பிரபலம். முக்கியமாக இந்தியாவில் இதனைப் பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5.5 கோடி தினசரி பார்வையாளர்களை மட்டும் கொண்டிருந்த இச்செயலியை தற்போது மாதம் 100 கோடி பேர் உபயோகப்படுத்துவதாக அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து செய்தி வெளியாகியிருக்கிறது.

இதனால் , குறிப்பிட்ட காலத்தில் இத்தனை பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்தற்காக பயனாளர்களிடம் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ’டிக்டாக்’ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் மற்ற சமூக வலைதளமான ஃபேஸ்புக் மாதம் 350 கோடி பயனாளர்களையும் , யூடியூப் 345 கோடிப் பயனாளர்களையும் கொண்டிருக்கிறது.

அடிப்படையில் டிக்டாக் சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் செயலி என்றாலும் இதைப் பயன்படுத்துபவர்கள் அமெரிக்கா , ஐரோப்பா , பிரேஸில் நாடுகளில் தான் அதிகம் . 

மத்திய அரசு கடந்த ஆண்டு இந்தியாவில் 59 செயலிகளை தடை செய்தது. அதில் சமூகத்தை சீரழிக்கும் வகையில் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ‘டிக்டாக்’செயலியையும் தடை செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT