முகப்பு
செய்திகள்

ஆப்பிளின் முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் - அப்டேட்

ஆப்பிளின் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் ஐ.ஓ.எஸ். 16 பீட்டாவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Updated On : 12 ஏப்ரல், 2022 at 3:28 PM
பகிர்:

ஆப்பிளின் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் ஐ.ஓ.எஸ். 16 பீட்டா வெர்ஷனில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆப்பிள்  நிறுவனம் மென்பொருள் தொழில்நுட்பங்களான வி.ஆர். மற்றும் ஏ.ஆர். கலந்து முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

ஜூன் 2022 - ஜூன் 2023க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபோன் 16 வெளியாகும்போது இந்த கலப்பு ரியாலிட்டி ஹெட்செட்டும் வெளியாகலாம் என்று தெரிகிறது. 

Advertisement

தற்போது ஏ.ஆர்., வி.ஆர். ஆகிய இரு தொழில்நுட்பங்களையும் கலந்து பயன்படுத்தும் முறையில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன. அந்தவகையில் ஆப்பிள் நிறுவனம் மேம்பட்ட ஒரு தயாரிப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. 

ஆப்பிளின் முதல் கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் மேக், ஐபோன் அல்லது ஐபேடின் மாற்றாக இருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.