ஸ்பெஷல்

பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மனு!

மதுரை மாவட்டப் பள்ளிகளில் தோல் பாவைக்கூத்து கலைப்பயிற்சி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திச் சேவை

மதுரை, ஜூலை 2: மதுரை மாவட்டப் பள்ளிகளில் தோல் பாவைக்கூத்து கலைப்பயிற்சி அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கெங்குவார்பட்டியைச் சோ்ந்த தோல் பாவைக்கூத்து கலைக்குழுத் தலைவா் ஏ.முத்துலட்சுமண ராவ், மதுரை மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில்; ‘எங்கள் குழுவின் சார்பில் பாரம்பரிய தொல்கலைகளில் ஒன்றான தோல் பாவைக் கூத்து கலையை பலருக்கு கற்றுத் தருகிறோம். எனவே, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தோல்பாவைக் கூத்து வகுப்புகள் நடத்த அனுமதி அளித்திட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புரட்டாசி மாதப் பலன்கள் - மிதுனம்

புரட்டாசி மாதப் பலன்கள் - ரிஷபம்

புரட்டாசி மாதப் பலன்கள் - மேஷம்

நேபாளத்துக்கு எதிரான டி20 தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி அறிவிப்பு!

டிவிஎஸ் அப்பாச்சி 20-ஆம் ஆண்டு விழா எடிசன்!

SCROLL FOR NEXT