முகப்பு
உள்ளாட்சித் தேர்தல் 2019

ஈரோடு கவுந்தப்பாடி ஊராட்சியில் தேர்தலை புறக்கணித்த மக்கள்!

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

Updated On : 30 டிசம்பர் 2019, 12:14 pm IST
பகிர்:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள 362 வாக்காளர்கள் 1வது மற்றும் 4வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 362 வாக்காளர்களை 1வது வார்டுக்கு மறுவரையரை செய்து தராததை கண்டித்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.