ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை (டிச.30) காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஊராட்சி அய்யம்பாளையம் கலைவாணர் வீதியில் உள்ள மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அப்பகுதியில் உள்ள 362 வாக்காளர்கள் 1வது மற்றும் 4வது வார்டாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 362 வாக்காளர்களை 1வது வார்டுக்கு மறுவரையரை செய்து தராததை கண்டித்து அப்பகுதியில் உள்ள வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர்.