உள்ளாட்சித் தேர்தல் 2019

வாக்குச் சாவடியில் விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்!

DIN

திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளது புலிவலம் ஊராட்சி. இங்கு இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு திங்கள்கிழமை நடைபெற்றது. 

இதற்காக புலிவலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஆண்கள், பெண்கள் என இரு பாலருக்கமான இந்த வாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்த பெற்றோர்களுடன் அவர்களது குழந்தைகள் பலரும் வாக்குச் சாவடிக்ககு வந்திருந்தனர். 

தங்களது பெற்றோர் ஜனநாயக கடமையாற்ற வரிசையில் காத்திருந்த வேளையில், பள்ளி வளாகத்தில் இருந்த சறுக்கு விளையாட்டில் சிறுவர்கள் அனைவரும் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியுடன் விளையாடினர். 

வாக்குப்பதிவு பரபரப்பு, போலீஸார் கண்காணிப்பு என எதையும் கண்டு கொள்ளாமல் தங்கள் விருப்பம்போல் விளையாடி மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

இங்கு வருவேன் என நினைக்கவில்லை... பாஜகவில் இணைந்த நடிகர்!

SCROLL FOR NEXT