மக்களைவைத் தேர்தல் 2019

தேர்தலை நடத்தும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு எங்கு வாக்களித்தார் தெரியுமா?

DIN


தமிழகத்தில் 17-ஆவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (வியாழக்கிழமை) காலை முதல் விறுப்விறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

மக்களவைத் தேர்தலோடு, தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலின் வாக்குப்பதிவு மாலை 6 மணி நிலவரப்படி 71.62 சதவீத ஆக உள்ளது. 

இந்த தேர்தலில் அரசியல் தலைவர்கள் மற்றும் திரை பிரபலங்கள் என ஏராளமானோர் தங்களது தொகுதியில் வரிசையில் நின்று வாக்களித்தனர்.    

இதனிடையே, தமிழகத்தில் தேர்தலை நடத்தும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவும் தனது வாக்கை செலுத்தினார். அவர், சென்னை நெற்குன்றம் எம்.ஆர். மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT