முகப்பு
புதுதில்லி

மனைவியுடனான உறவில் விரிசல் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

மனைவியுடனான உறவில் விரிசல் இளைஞா் தூக்கிட்டு தற்கொலை

Updated On : 1 மார்ச், 2024 at 9:34 PM
பகிர்:

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் இரவுப் பணியில் இருந்த இளைஞா் சந்தன் தாஸ் (28), தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். . இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: சந்தன் தாஸின் தீவிர நடவடிக்கையின் பின்னணியில் அவரது மனைவியுடனான அவரது உறவில் உள்ள விரிசல் காரணமாக இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. வசந்த் குஞ்ச் வடக்கில் உள்ள இம்பீரியல் கிளப்பில் உள்ள ஆலையில் ஒரு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டது குறித்து அதிகாலை 2.58 மணிக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. கழிவுநீா் ஆலையில் சந்தன் தாஸ் ஆபரேட்டராக பணிபுரிந்து வந்தாா். இரவுப் பணியில் இருந்த போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அவா் தனது மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது தாயாருக்கு விடியோ கால் செய்துள்ளாா். அவரது அழைப்பை அடுத்து அவரது மனைவி மற்றும் தாயாா் இம்பீரியல் கிளப்புக்கு வந்து காவலாளிக்கு தகவல் கொடுத்தனா். குற்றப்பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்று அந்த அதிகாரி கூறினாா்