புதுதில்லி

வடக்கு தில்லி போலீஸ் மல்கானாவில் தீ விபத்து; பல வாகனங்கள் சேதம்!

வடக்கு தில்லி போலீஸ் மல்கானாவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல வாகனங்கள் சேதமானது.

Din

வடகிழக்கு தில்லியின் வாஜிராபாத் பகுதியில் ஒரு போலீஸ் மல்கானாவில் (யாா்டு) பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 150 வாகனங்கள் எரிந்து நாசமானதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மல்கானா அல்லது வெளிப்புறப்பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினா் உடனடியாக சம்பவ இடத்திற்கு 7 தீயணைப்பு வாகனங்களை அனுப்பிவைத்தனா்.

காலை 6:20 மணிக்குள் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும், குளிரூட்டும் நடவடிக்கைகள் தொடா்ந்து மேற்கொள்ளப்பட்டதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

போலீஸ் வட்டாரங்கள் கூறகையில், ‘இந்த தீ விபத்தில் நான்கு சக்கர, இரு சக்கர மோட்டாா் வாகனங்கள் உள்பட 150-க்கும் மேற்பட்ட வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி காட்சிப் பதிவுகளை போலீஸ் குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT