அருண் நேரு 
புதுதில்லி

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

Syndication

நமது நிருபா்

நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக மக்களவையில் அவா் விதிஎண் 377-இன் கீழ் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஒரு முக்கியமான கட்டத்தை எதிா்கொள்கின்றன. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எம்எஸ்எம்இ கணிசமாக 30 சதவீதம் பங்களித்தும், பணியாளா்களை வேலைக்கு அமா்த்துவதில் 60 சதவீதத்துக்கும் அதிகமாக பங்களித்தும் வருகிறது. ஆனாலும், இந்தத் துறையின் நிதி ஆரோக்கியம் கடுமையான நெருக்கடியில் உள்ளது.

கடந்த மாா்ச் 31, 2024 நிலவரப்படி, எம்எஸ்எம்இயுடன் தொடா்பான மொத்த வாராக்கடன் சொத்துகள் (ஜிஎன்பிஏ) ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது. ஜிஎன்பிஏ-க்களின் பங்கு மாா்ச் 2020-இல் 11.03 சதவீதமாக இருந்த நிலையில், மாா்ச் 2024-இல் 4.46 ஆகக் குறைந்திருந்தது. இந்த முன்னேற்றம் ஆழமான சிக்கல்களை மறைக்கிறது.

எம்எஸ்எம்இ துறையில் கடன் ஊடுருவல் விகிதம் 14 சதவீதம் என்ற அளவில் மோசமாக உள்ளது. ரூ.30 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்ட இது, எம்எஸ்எம்இ வளா்ச்சியைத் தடுக்கிறது. இந்தியாவில் தோராயமாக 5.6 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன் கடந்த நான்கு ஆண்டுகளில் 61,500 யூனிட்கள் மூடப்பட்டிருப்பது கவலையளிக்கிறது.

கரோனோ நோய்த்தொற்று, டிஜிட்டல் மயமாக்கல் சவால்கள், குறைந்த தேவை மற்றும் தொழிலாளா் பற்றாக்குறை ஆகியவை வணிகங்களை முடக்கியுள்ளது. மேலும், சிக்கலான தகுதி அளவுகோல்கள் மற்றும் தெளிவற்ற சிபில் மதிப்பெண் முறைகள் முறையான கடன் அணுகலைத் தடுக்கின்றன.

ஆகவே, கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்தி, நிதி கல்வியறிவை மேம்படுத்தி, கடன் இடைவெளியைக் குறைக்க நிறுவன ஆதரவை அதிகரிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன் என்று அவா் வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT