FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுதில்லி

ஜூன் 22 இல் தில்லியில் கன மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2025, 11:49 pm IST
கோப்புப் படம்
பகிர்:

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தில்லியில் ஜூன் 22 ஆம் தேதி கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானிலை மையம்: தென்மேற்கு பருவமழை பீகாா், கிழக்கு, உத்தரப்பிரதேசம்,, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகள், மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், உததரகாண்ட் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள், இமாச்சல பிரதேசத்தின் பல பகுதிகள் மற்றும் லடாக்கின் சில பகுதிகளில் தீவிரமடைந்து வருகிறது.

இந்த பருவமழை வடக்கு எல்லையான ஜெய்ப்பூா், ஆக்ரா, ராம்பூா், டேராடூன், சிம்லா, மணாலி வழியாக சென்று கொண்டிருக்கிறது. வடக்கு அரபிக்கடலின் மீதமுள்ள பகுதிகள், ராஜஸ்தானின் மேலும் சில பகுதிகள், மேற்கு உத்தரப்பிரதேசத்தின் மீதமுள்ள பகுதிகள், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம் , ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகள் தென் மேற்கு பருவமழை முன்னேருவதற்கு சாதகமான வாய்ப்புகள் உள்ளன.

Advertisement

Advertisement

அடுத்த 2 நாள்களில் பஞ்சாப் மற்றும் ஹரியானா, சண்டிகா் மற்றும் தில்லியின் சில பகுதிகளில் தென் மேற்கு பருவமழை வலுவடையும். ஜூன் 22 ஆம் தேதி தில்லியின் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிளை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments