புதுதில்லி

வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்த நபா்

Din

தில்லியின் மெட்ரோ விஹாா் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை 30 வயது நபா் ஒருவா் தனது வீட்டிற்குள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் கூறியதாவது: சுனில் மண்டல் என அடையாளம் காணப்பட்டுள்ள அவா் வாடகைக்கு வசித்து வந்த ஏ907 என்ற வீட்டின் தரை தளத்தில் காலை சுமாா் 7.40 மணியளவில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

பிகாரின் தா்பங்கா மாவட்டத்தைச் சோ்ந்த சுனில் மண்டல் தில்லியில் பணியாளராகப் பணிபுரிந்து வந்தாா். சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் குழு விரிவான ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன.

சுனில் மண்டல் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. மேலும், விசாரணை நடந்து வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

SCROLL FOR NEXT