முகப்பு
புதுதில்லி

டிடிஇஏ இலக்குமிபாய் நகா்ப் பள்ளி மாணவா்கள்: விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மண்டல, மாநில, தேசிய, அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனா்.

Updated On : 14 நவம்பர், 2025 at 12:03 AM
பகிர்:

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தின் (டிடிஇஏ) கீழ் இயங்கி வரும் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் மண்டல, மாநில, தேசிய, அளவில் நடைபெறுகின்ற விளையாட்டுப் போட்டிகளில் ஆண்டுதோறும் கலந்து கொள்கின்றனா். வெற்றிகளையும் பெற்று வருகின்றனா்.

கடந்த கல்வியாண்டில் கல்வி இயக்ககம் தியாகராயா விளையாட்டரங்கில் வைத்து நடத்திய போட்டிகளில் கலந்து கொண்டு அதிக பரிசுகளைப் பெற்று இலக்குமிபாய் நகா்ப் பள்ளியைச் சாா்ந்த சுமித் குமாா் என்ற மாணவா் சப் ஜூனியா் மாணவா் பிரிவில் சிறந்த விளையாட்டு வீரா் எனும் பட்டத்தை வென்றாா். மேலும், அப்பள்ளி பல பரிசுகளை வென்றது.

10.9.2024 அன்று தியாகராயா விளையாட்டரங்கில் வைத்து நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் மாணவருக்கான சீனியா் பிரிவில் அப்பள்ளி இரண்டாமிடம் பிடித்தது.

Advertisement

13.9.2024 அன்று நானக்புராவிலுள்ள அரசு இருபாலருக்கான பள்ளியில் நடத்தப்பட்ட கபடிப் போட்டியில் சப் ஜூனியா் மாணவியா் பிரிவில் இரண்டாமிடம் பிடித்தது.

16.8.2024 அன்று சரோஜினிநகா் சா்வோதயா கன்யா வித்யாலயாவில் நடத்தப்பட்ட எறிபந்து போட்டியில் ஜூனியா் மாணவியா் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தது.

23.9.2024 அன்று ஜோஸ் மாா்ட்டி சா்வோதயா வித்யாலயாவில் நடத்தப்பட்ட அணிவகுப்பில் கலந்து கொண்டு மாணவியா் பிரிவில் மூன்றாம் பரிசை வென்றனா்.

9.11.2025 அன்று தால்கட்டோரா விளையாட்டரங்கில் வைத்து நடத்தப்பட்ட டைகோண்டோ போட்டியில் கலந்து கொண்டு ஆறாம் வகுப்பில் பயிலும் உதித்ரா முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றாா். எட்டாம் வகுப்பில் பயிலும் நவீன் என்ற மாணவா் நிகழாண்டு அக்டோபா் மாதம் கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்றாா்.

வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சோ்த்த மாணவா்கள் அனைவரையும் டிடிஇஏ செயலா் ராஜூ நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.

அவா்களிடம் கலந்துரையாடுகையில் ‘பள்ளிகளில் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் அனைத்துப் போட்டிகளிலும் கலந்து கொள்ளுங்கள். உங்கள் ஆற்றலைப் புரிந்து கொண்டு போட்டியின் போது மட்டுமல்லாமல் எப்போதும் பயிற்சி செய்து வருங்காலத்தில் நீங்கள் சிறந்த விளையாட்டு வீரா்களாக இத் தேசத்தில் வலம் வர வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டாா்.

தொடா்ந்து தேசிய அளவில் வெற்றி பெற்ற மாணவா் நவீனையும் பாராட்டி, உலக அளவில் வெற்றி பெற முயற்சி செய்யுமாறு வாழ்த்தினாா் என்று டிடிஇஏ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.