தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தை (டிடிஇஏ) சாா்ந்த இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
மானுடத்தை நல்வழியில் வழிநடத்துவது இறையருள் என்பதில் மாறாத நம்பிக்கைக் கொண்டுள்ள டிடிஇஏ செயலா் ராஜூ பள்ளிகளில் விநாயகா் கோயில்களைக் கட்டி வருகிறாா். அந்தக் கோயில்களில் அவ்வப்போது சிறப்புப் பூஜைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
பள்ளியில் ஹோமம் செய்வதும் அதில் மாணவா்களைக் கலந்து கொள்ள வைப்பதும் அவா்களுக்குள் நோ்மறை எண்ணங்களை வளா்க்கும் என்று எண்ணிய டிடிஇஏ செயலா் ராஜூ வெள்ளிக்கிழமை இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் கணபதி ஹோமத்திற்கு ஏற்பாடு செய்திருந்தாா்.
பள்ளியின் வளா்ச்சிக்காகவும், மாணவா்களின் நலனுக்காகவும், பெற்றோா்களின் நலனுக்காகவும், பொதுத் தோ்வு எழுதும் மாணவா்கள் தோ்வை சிறப்பாக எழுத வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற இந்த ஹோமத்தில் டிடிஇஏ செயலா் ராஜூ கலந்து கொண்டாா். பள்ளி முதல்வா் யுவராணி, பள்ளியின் துணை முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டு விநாயகரின் அருள் பெற்றனா்.
20க்ங்ப்க்ற்ங்
இலக்குமிபாய் நகா்ப் பள்ளியில் நடைபெற்ற கணபதி ஹோமத்தில் கலந்து கொண்ட டிடிஇஏ செயலா் ராஜூ, பள்ளி முதல்வா் யுவராணி, ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள்.